Sunday, December 29, 2013

தகவல் உரிமைச் சட்டம்


●    மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, நாம் கேட்கும் தகவல்களை அந்த அமைப்புகள் நமக்கு அளிக்க வேண்டியதை கட்டாயமாக்கும் தகவல் உரிமைச் சட்டம் 2005-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

●   இச்சட்டத்தை நம் நாடாளுமன்றம் இயற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

●   2002-ஆம் ஆண்டில் ஜம்மு- காஷ்மீர் தவிர, இதர மாநிலங்களுக்கு பொருந்துகிற தகவல் சுதந்திர சட்டத்தை நம் நாடாளு மன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டமும் பலவீனமான சட்டம் என்பதைவிட, இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்படவில்லை. மேலும், 2002- ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த அந்த சட்டத்திற்குப் பதிலாக, 2005-ஆம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

●   இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், நீதிமன்றம், சட்டப் பேரவை முதலியனவற்றுக்குப் பொருந்தும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், அரசிடமிருந்து நேரடி யாகவோ, மறைமுக மாகவோ உதவிபெறும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியா அமைப்புகளும் இச்சட்டத்தின்கீழ் வரும். அரசிடமிருந்து சலுகை விலையில் நிலத்தைப் பெற்ற நிறுவனங்கள் அல்லது வரிச்சலுகை பெற்ற தனியார் பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

●   தனியார்துறை தொடர்பாக, அரசு தற்போதுள்ள சட்டத்தைப் பயன்படுத்தி பெறும் தகவல்களை இந்திய குடிமகனும் இச்சட்டத்தின் மூலம் பெறலாம்.

●   இப்புதிய சட்டம், "தகவல்' என்ற சொல்லுக்கு விரிவான விளக்கத்தை அளிக்கிறது. இதன்படி ஒரு விஷயம் குறித்து, அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளும் கருத்துகளும்கூட, நிபந்தனையின் பேரில் வெளியிடப்பட வேண்டும். இச்சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ், விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, ஒரு விஷயம் குறித்து அதிகாரிகள் கோப்புகளில் எழுதிய குறிப்புகளும், கேட்பவருக்கு அளிக்கப்பட வேண்டும்.

●   ஒவ்வொரு அரசுத்துறையும் பொது  மக்களிடமிருந்து மனுக்களைப் பெறவும், அது தொடர்பான தகவல்களைத் தரவும், மக்கள் தகவல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப் படும் மனுவுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும். இருப்பினும், மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பின், அது தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஒரு நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்கள் 48 மணி நேரத்திற்குள் அளிக்கப்பட வேண்டும்.


●  
இச்சட்டத்தின் கீழ் சில வகைத் தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு, அறிவியல்  அல்லது பொருளாதார நலன்களைப் பாதிக்கும் தகவல்கள், அண்டை நாடு களுடன் உறவைப் பாதிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டிவிடும் தகவல்கள் ஆகியவற்றை வெளியிட இச்சட்டம் தடை செய்கிறது. நீதிமன்றத்தாலோ, தீர்ப்பாயத்தாலோ தடை செய்யப்பட்ட தகவல்கள், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் உரிமையைப் பாதிக்கும் தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


●   மூன்றாம் நபரின் வர்த்தக நலன்களைப் பாதிக்கக்கூடிய, வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் உரிமைகள் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி, அவற்றை வெளியிடலாம் என்று தகுதியுடைய அதிகாரி தெரிவிக்கும் பட்சத்தில், அத்தகவலை வெளியிடலாம் என்று இச்சட்டத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வெளிநாட்டு அரசுகளிடமிருந்து பெறப் படும் ரகசியத் தகவல்கள் ஒரு வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் என்பதாலோ, ஒருவரின் உயிருக்கோ, பாதுகாப்பிற்கோ குந்தகம் விளைவிக்கும் என்பதாலோ, அத்தகைய தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக் குறிப்புகள், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் கருத்துகள், செயலர்கள் மற்றும் இதர அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களில் எடுக்கப்படும் குறிப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அத்தகைய முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை இந்த சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் வெளியிடத் தடையில்லை என்றால், அந்த தகவலையும் மக்களுக்காக வெளியிடலாம்.
●   அரசின் பதிப்பக உரிமை தவிர, இதர பதிப்பக உரிமைகளை மீறும் தகவல்கள், தனிநபர் சுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல் ஆகியவற்றை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், பொதுநலன் கருதி, இவற்றை வெளியிடலாம்.

●   நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் மறுக்கக்கூடாத தகவல் எந்த ஒரு தனி நபருக்கும் மறுக்கக்கூடாது. அதேபோல, ஆவணம் ஒன்றில், வெளியிடத் தடை செய்யப்பட்ட பகுதி தவிர, எஞ்சியவற்றை வெளியிட வேண்டும் என்றும் இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

புகார்களும் மேல்முறையீடுகளும்


●   இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், சுயேட்சையான தகவல் ஆணையங்களை அமைக்க வகை செய்கிறது. இதன்படி, மத்தியில் ஒன்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றும்(பிரிவு 15-ன்படி) என ஆணையங்கள் அமைக்கப்படும். இந்த ஆணையத்தின் தலைவராக தலைமைத் தகவல் ஆணையர் இருப்பார். அவருக்கு கீழ் 10 தகவல் ஆணையர்கள் இருப்பார்கள். இச் சட்டத்தை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம்.

●   தகவல் தர மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் தகவல் அதிகாரிக்கு எதிராக இரண்டு நிலைகளில் முறையீடு செய்யலாம். தகவல் அதிகாரியைவிட, மூத்த அதிகாரியிடம் முதலாவதாக முறையீடு செய்யலாம். இரண்டாவதாக மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம். ஒரு விஷயம் தொடர்பான தகவலை தர மறுப்பதற்கான காரணத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் தகவல் அதிகாரிக்கு உண்டு. தகவல் அதிகாரிக்கு எதிரான முறையீடுகளை 30 முதல் 45 நாட்களுக்குள் பைசல் செய்துவிட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.

●   ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட தகவலை வெளியிட வேண்டாம் என்று நிரூபிக்கப் பட்டால் அன்றி,  அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டியவையே என்றும் மேல் முறையீட்டு அதிகாரிகள் கருத இச்சட்டம் வகை செய்கிறது.

●   இச்சட்டத்தை மீறும் தகவல் அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. காரணம் ஏதும் இல்லாமல் செய்யப்படாத தாமதத்திற்கு, தகவல் ஆணையம் நாளொன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கலாம்.
●   மக்களிடமிருந்து மனுக்களை பெற மறுக்கும் அதிகாரிகள் மீதும் ரூ. 2500 வரை அபராதம் விதிக்கலாம். இருப்பினும் தகவல் அதிகாரிகள் நேர்மையாகவும் மனப்பூர்வமாகவும் செயல்படும்போது ஏற்படும் தவறுகளிலிருந்து சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

●   அனைத்துத் தர மக்களும், குறிப்பாக கிராம மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் அரசிடமிருந்து தகவல் பெறுவதற்கு இச்சட்டத்தில் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டுதான், இச்சட்டம் நியாயமான கட்டண விதிப்பிற்கு வகை செய்கிறது.

●   வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள எளிய மக்களுக்கு இந்த கட்டணவிதியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.

●   தகவல் கோருவோர், தகவலைப் பெறுவதற்கான காரணத்தை சொல்லத் தேவையில்லை. அதேபோல் தங்களைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. தகவல் கோரும் அனைவருக்கும், குறிப்பாக புலன் வளர்ச்சி குன்றியவர்களுக்கு கோரிக்கை களை எவ்வாறு அரசிடம் சமர்ப்பிப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் உதவவும் அரசு கடைமைப்பட்டிருக்கிறது.

●   தமிழக அரசு 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தினை வெளியிட்டது.    
 

Sunday, November 17, 2013

வங்கிகளை தேசிய உடமையாக்கியது ஏன்?

தினான்கு வங்கிகளை தேசிய உடமையாக்கியுள்ள நடவடிக்கையானது கண்டிப்பான பொருளாதார ரீதியில் பார்த்தாலும் சரி, கோடிக்கணக்கான நம் மக்களின் நம்பிக்கைகளும் ஆதர்சங்களும் பலியாகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக நாம் கொண்டுள்ள பரந்த லட்சியங்களை, நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்போகும் லட்சியங்களைக் கொண்டு கவனித்தாலும் சரி, முற்றிலும் நியாயமானதே ஆகும். 1964-லேயே சோஷலிச பாணி சமுதாயத்தை ஏற்படுத்தும் லட்சியம் பார்லிமெண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுத் தரப்புத் தொழில்களில் வரவர அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டது. அதனால், தொழில்கள் மேலும் விருத்தி அடைவதற்கு வேண்டிய அடிப்படையான ஆதார அமைப்புகள் உருவாயின.

தனியார் தரப்பு, சர்க்கார் தரப்பு முயற்சிகளின் தராதர மதிப்புகள் பற்றி விவாதிப்பது ஒரு கற்பனை ரீதியிலான விவாதமென்று நான் கருதுகிறேன். அவை இரண்டுக்கும் நம் பொருளாதாரத்தில் முக்கியமான பங்குண்டு. தனியார் தரப்பு சகல சிறப்புகளுக்கும் உறைவிடம் என்று கருதிவிட வேண்டாம். உண்மையில் அதன் சாதனைகளைப் பார்த்தால் உற்சாகமோ ஊக்கமோ ஏற்படுவதற்குக் காரணமில்லை. நாட்டில் உள்ள வர்த்தக பங்குகளில் பெரும்பாலானவை செயல்பட்டு வந்த தன்மையைப் பரிசீலிக்கும் தோறும், நாம் இப்போது விவாதிக்கிற இந்த மசோதா கண்டிப்பாய் செய்தே ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடு என்ற அபிப்பிராயத்திற்கே வருவோம்.

வங்கி தொழிலுக்கும் மற்றத் தொழில்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. வங்கிகள் விஷயத்தில் பங்குதாரர்களுக்குள்ள நிதி ஈடுபாடு வெகு சொற்பம். இந்த வங்கிகள் விஷயத்தில் 1968 டிசம்பர் 31-ந்தேதி மொத்தம் 2, 750 கோடி ரூபாய் டெபாசிட் இருந்ததற்கு மாறாக, வங்கிகளின் செலுத்தப்பட்ட மூலதனம் 28. 5 கோடி ரூபாயாகத்தானிருந்தது; அதாவது ஒரு சதவீதத்துக்குச் சற்று கூடுதலாகத் தானிருந்தது. எனவே, வங்கி நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் பிறத்தியார் பணத்தை வைத்துதான் லோவாதேவி செய்து வந்திருக்கிறார்கள்.

வங்கி நடவடிக்கைகளிலுள்ள இந்த அம்சம் சோஷலிசத்தை மேற்கொள்ளாத நாடுகளில் கூட எப்போதும் கவலைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. உண்மையில், பிரதானமாய் முதலாளித்துவ பொருளாதார அமைப்பே உள்ள சில நாடுகள் கூட வங்கிகளைத் தேசிய உடமையாக்கி விட்டிருக்கின்றன; அல்லது வங்கிகள் மீது வெகு கண்டிப்பான கண்காணிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரான்ஸ் அதன் பிரதான வங்கிகளில் நான்கைத் தேசிய உடமையாக்குவது அவசியமென்று கருதி அவ்வாறு செய்திருக்கிறது. எஞ்சி விட்டுவைக்கப்பட்ட இரு வங்கிகளிலும் சேர்த்து கூட்டாக அந்நாட்டின் மொத்த வங்கி ஆஸ்திகளில் 1/20 பங்குதான் இருந்தது. இதேபோல், இத்தாலியிலும் பிரதான ஐந்து வங்கிகளில் நான்கு அரசுத்தரப்பிலேயே இருக்கின்றன. ஸ்வீடன் தேசத்தில், இரு வங்கிகளின் மூலதனத்தை சர்க்கார் மேற்கொண்டுவிட்டார்கள்;  அந்த வங்கிகள் 1950-ல் ஒன்று சேர்க்கப்பட்டன.
 சமூகக் கட்டுப்பாட்டின் சில பலவீனங்கள்

வங்கிகள் மீதுள்ள சமூகக் கட்டுப்பாடு பற்றிப் பலர் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதை ஏன் இன்னும் சற்று அதிக காலத்துக்கு பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று கேட்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடு விஷயத்தில் பல பயனுள்ள அம்சங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தொழில் ரீதியான நிபுணர்கள் நிர்வாகம் அதில் வற்புறுத்தப்பட்டிருக்கிறது; இது இனியும் பொருத்தமான அம்சமாகவே இருந்து வரும். விவசாயம், ஏற்றுமதி, சிறுதொழில்கள் ஆகியவைகளுக்கு இன்னும் உயர்தர முதன்மைக் கிரமம் அளிக்கப்படவேண்டும் என்று அதில் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூகக் கட்டுப்பாட்டில் சில பலவீனங்கள் இருந்தன. பல வங்கிகள் விஷயத்தில் அவைகளின் கொள்கைகளைத் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருந்தவர்களே பிறகும் ஏதாவதொரு வழியில் தொடர்ந்து தங்கள் செல்வாக்கைப் பிரயோகித்து வந்தார்கள்; சில சமயங்களில் முன்பிருந்த போர்டு தலைவரோ உப தலைவரோ போர்டில் பதவி வகிப்பதன் மூலம் இவ்வாறு செய்யப்பட்டு வந்தது. அவர்கள் இட்ட கட்டளைகளையும், உத்தரவுகளையும் வங்கிகள் அனுசரித்து நடக்கலாம்; சில வங்கிகள் அப்படி நடந்து மிருக்கின்றன. ஒரு கொள்கையை மனமார உற்சாகத்தோடு நடத்தி வைக்கிறவர்களுக்கும், ஏதோ சில கட்டளை களுக்காக மாத்திரமே அவ்வாறு செய்கிறவர்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இந்தச் சட்டங்களைக் கூட சில வங்கிகள் ஏற்று நடக்கவில்லை. உரிமை குறைந்த மக்கள் தங்கள் காலில் நிற்பதற்கு உதவி புரிய நாம் செய்யும் முயற்சிகளை அவர்கள் ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும் கவனித்து வருகிறார்கள் என்பதை இனியும் நாம் தொடர்ந்து புறக்கணிப்பதற்கில்லை.

சிறிய வங்கிகள் இச்சட்டத்தில் சேர்க்கப்படாதது பற்றிக் கூறப்படுவது மற்றொரு குறை. வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டதன் நோக்கம், விவசாயம், சிறு தொழில்கள், ஏற்றுமதிகள் ஆகியவை விஷயத்தில் துரித வளர்ச்சி ஏற்படும்படி செய்வதற்கும், புதிதாகத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னடைந்த நிலையில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விருத்தி செய்வதற்கும் வழி செய்வதுதான். 50 கோடி அல்லது அதற்குமேல் டெபாசிட் உள்ள வங்கிகளுக்குப் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இதற்கு மாறாக, சிறிய வங்கிகள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரமே  உள்ளன; இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 14 வங்கிகள் விரிவான ரீதியில் தொழில் செய்கிற அனுகூலத்தால், சர்க்காரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு அவை சிறிய வங்கிகளைவிட நல்ல நிலையில் உள்ளன. சிறிய வங்கிகள் ஏற்கெனவே பிரதானமாய் சொற்பக் கடன் வாங்குபவர்களுக்கே சேவை செய்து வருகின்றன. அவை வழங்குகிற கடன்களின் சராசரித் தொகை குறைவாக இருப்பதி லிருந்து இது புலனாகும். சிறிய வங்கிகள் அவை சேவை செய்து வருகிற சமூகத்தோடு ஒட்டிய ஓர் அம்சமாகவே இருந்து வருகின்றன. சிறிய வியாபாரிகளுக்கும், சிறிய தொழில் துறையாளர்களுக்கும் அவைகளின் நடவடிக்கைகள் மீது ஓரளவு செல்வாக்கு இருந்து வருகிறது.
இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வங்கிகளை நடத்துவதற்காக ஒரே முழு பிண்டமான மத்திய  ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தும் உத்தேசம் நமக்கில்லை. மத்திய ஸ்தானத்தில் உள்ள ஸ்தாபனத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்தான்; ஆனால் ஒவ்வொரு வங்கிகளுக்கும் சுயேச்சை அதிகாரம் இருக்கும்;  அவைகளின் போர்டுகளுக்கு நன்கு வரையறை செய்யப் பட்ட அதிகாரங்கள் இருக்கும். இப்படி இப்படிச் செய்ய வேண்டுமென்று கட்டளைகள் இடத்தான் செய்வோம்; ஆனால், அவை கொள்கை ரீதியாகவும் பொதுப் பிரச்சினைகள் பற்றியவையாகவுமே இருக்கும். குறிப்பிட்ட தரப்பாருக்குக் கொடுக்கப்படும் தனித் தனிக் கடன்கள் பற்றியவையாக இருக்காது. அளவுக்கதிகமான குறுக்கீடு களால் ஆபத்து ஏற்படாமல் வெகு ஜாக்கிரதையாகக் கண்காணித்து வருவோம். அத்தகைய குறிக்கீடுகள் அரசியல் காரணங்களால் ஏற்படுபவையாயிருப்பினும் சரி, மற்றக் காரணங்களால் ஏற்படுபவை யாயிருப்பினும் சரி நம் கண்காணிப்பு இருக்கும்.

அதிகார வர்க்கக் கட்டுக்கோப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வங்கிகளின் சுய முயற்சி ஊக்கத்தையும், ஆர்வ ஊக்கத்தையும் தனித் தன்மையையும் நாம் பாதுகாக்க வேண்டியதுதான். நல்ல முறையில் போட்டா போட்டியும், சுய முயற்சி ஊக்கமும் மறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறபடி நாம் இதைச் செய்வோம்.

நியாயமான நஷ்ட ஈடு


நாம் ஏற்பாடு செய்துள்ள நஷ்ட ஈடு நியாயமானதும் நேர்மையானதும்தான் என்று பங்குதாரர்களுக்கு இச்சந்தர்பத்தில் நான் கூற விரும்புகிறேன். வாஸ்தவமாய் பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் நஷ்ட ஈடு கிடைக்கச் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்படி செய்ய முயன்று வருகிறோம். சர்க்கார் பத்திரங்கள் ரூபத்தில் நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுப்பதால், பங்குதாரர்களுக்குக் கஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதை நான் பலமாக மறுக்கிறேன். சமீபத்தில்தான் இந்திய சர்க்கார்  சதவீத வட்டியுடன் 7 வருஷத்தில் திருப்பித் தருகிற ஒரு கடனை எழுப்பி னார்கள். அந்தப் பத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் சற்று அதிகமான விலைக்கே விற்கப்படுகிறது.  சதவிகித வட்டியுள்ள 30 வருஷக் கடனுக்கும் சற்று அதிக விலைதான் இருந்து வருகிறது. நிதியாக வழங்கப்படும் பத்திரங்கள் காரணமாய் பங்குதாரர்களுக்கு மூலதனம் நஷ்டமாகிவிடும் என்று கூறுவது மிகவும் அபாயகரமான பொறுப்பற்ற பேச்சாகும்.

சற்று ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பிரிவினரின் ஆஸ்திகளின் உண்மையான பெறுமதியைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பிவிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் உடமைகளை அவைகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலையைவிடக் குறைந்த மதிப்பிற்கு விற்றுவிடும்படி செய்யப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஏய்க்கப்படுவதற்கு வழி செய்யக்கூடிய எதையும் யாரும் சொல்லமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது கொடுக்கப்படுகிற பத்திரங்கள் கைமாற்றக் கூடிய பத்திரங்கள். அவைகளை விற்கலாம்; எவ்வித நஷ்டமும் ஏற்பட அவசியமில்லாதபடி நல்ல விலை அவைகளுக்குக் கிடைக்கும்.
 
வாக்குறுதிகள்

வங்கி நிர்வாகிகள், சிப்பந்திகள் ஆகியோரின் நியாயமான நலன்களை நாங்கள் நன்கு கவனித்துக் கொள்வோம் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இனி நாட்டின் நலத்தையோ  அல்லது வங்கி தொழிலின் நன்மையையோ புறக் கணிக்கிற எந்தவிதமான கிளர்ச்சி மனப்பான்மையும் இருக்கக்கூடாது. தொழில் சிப்பந்திகளும், நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

தொழில் துறைக்கோ வர்த்தகத்திற்கோ அல்லது விவசாயத்திற்கோ உண்மையாக வேண்டுகிற கடன் வசதிகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும். வங்கிகளிடம் டிபாசிட்டர்கள் ஒப்படைத்துள்ள நிதிகளை வங்கிகள் புனிதமான தர்மப் பொறுப்பாக பாவிக்கும். இந்தியப் பொது மக்களுக்கு ஏற்கனவே சர்க்கார் தரப்பு வங்கிகளிடம் லேவாதேவி செய்து பழக்கம் உண்டு. ஸ்டேட் வங்கியும் அதன் துணை ஸ்தாபனங்களும் ஏற்கனவே மொத்த டிபாஸிட்டுகளில் மூன்றில் ஒரு பங்கின் மீது கட்டுப்பாடு உள்ளவையாக இருக்கின்றன.              இதனால் டிபாஸிட்டர்களின் நலன் எந்தவிதத்திலாவது ஆபத்திற்குள்ளாகி இருப்பதாக யாரும் கூறியதில்லை. ஸ்டேட் வங்கி பரிபூரணமாய் செவ்வையானது என்று நான் கூறவில்லை. ஆனால் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஒப்பிட்டுப் பார்த்தால், திறமையிலாயினும் சரி கடன் வழங்குவதிலாயினும் சரி எந்தத் தனியார் வங்கிக்கும் அது பின் வாங்கவில்லை. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகள் எட்டாத் தொலைவிலுள்ள கிராமங்களில் கூட மக்களிடையே வங்கி லேவாதேவிப் பழக்கத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு எடுத்து வந்துள்ளன. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளிடம் 1967 இறுதியில் ஒன்றரை கோடி பேர் டிபாசிட் கணக்கு வைத்திருந்தனர். 700 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் தொகை இருந்தது. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளின் பணம் போட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலாயினும் சரி தங்கள் நலன்களுக்கு ஆபத்து ஏற்பட்டதென்று பயந்ததாக, சர்க்காரைப் படுமோசமாகக் குறை கூறுபவர்கள் கூடச் சொல்லமாட்டார்கள்.

பொது மக்களுக்கு இன்னும் சீரான விரிந்த அளவு சேவை கிடைக்கும் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலோ வங்கி வசதிகள் விஷயத்தில் ஏற்பட்டு வந்துள்ள அபிவிருத்தி எங்கும் ஒரே சமசீராக இருக்கவில்லை. வங்கி வசதிகள்             குறைந்துள்ள மாநிலப் பகுதிகளில் வங்கி வசதிகளை விஸ்தரிப்பது அவசியம். அபிவிருத்தி ஏற்பட்டுள்ள மாநிலங்களில் கூட வங்கி வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டும்தான் இருக்கின்றன; முக்கியமாய் பெரிய பட்டணங்களில்தான் இருக்கின்றன. ஓரளவு நகரமாய் இருக்கிற பகுதிகளும் கிராம கேந்திரங்களும் சற்று             அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்றே கூறலாம். மாநிலங்களில் கடனுக்கும் டிபாசிட்டுத் தொகைகளுக்கும் உள்ள விகிதாசாரக் கணக்கைக் கவனித்தால் பல ராஜ்யங்களில் அது மிகக் குறைவாகவே இருக்கிறது. உதாரணமாக, அஸ்ஸாம், பீஹார், ராஜஸ்தான், ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகியவைகளைக் கூறலாம். இது காரணமாய் புகார்களும் வந்துள்ளன. அதாவது வங்கிகள் சில பகுதிகளில் டிபாசிட் மூலம் நிதி வசதியைத் திரட்டிக் கொண்டு வேறு இடங்களில் அவைகளைக் கடனாக வழங்கிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று குறை கூறப்படுகிறது. இதனாலும் பிரதேச ரீதியில் சம வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு மேலும் குந்தகம் உண்டாகிறது என்கிறார்கள். வங்கிகள் பொதுத் தரப்புக் கட்டுப்பாட்டில் இருந்தால் இந்தப் போக்குகளைத் திருத்தலாம். அடிக்கடி வற்புறுத்தப்படுகிற சம ரீதியான பிரதேச வளர்ச்சிக்கு வழி செய்யும் கொள்கையை நிறைவேற்றலாம்.

மக்கள் ஆதரவு

இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது சர்க்கார் தங்களுக்கு இந்த நடவடிக்கைக்காக தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான மனமார்ந்த ஆதரவுகளுக்கு அருகதை உள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். இந்த ஏற்பாட்டை அமுல் செய்வதில், கடன் வசதிகளை விஸ்தரிப்பது மாத்திரம் கருத்தல்ல; அந்தக் கடன் வசதி குறிப்பிட்ட காரியத்துக்குப் பயன்படும்படி விஸ்தரிக்க  விரும்புகிறோம். சுதந்திரம் ஏற்பட்டதிலிருந்து தேசத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் பல்வேறு பகுதி இடங் களுக்கும் இருந்து வருகிற ஆழ்ந்த அதி முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே அந்தக் காரியம்.

இது சரித்திர முக்கியத்துவம் உள்ள நடவடிக்கை  அல்ல; ஆனால் சரியான திசையில் செல்லும் நடவடிக்கையாகும். அதை வெற்றிகரமாக நடத்திவைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ள எல்லாரும் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவித்து எங்களுக்கு உதவி புரியும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அவைகளை நாங்கள் நிச்சயமாய் பரிசீலிப்போம். அவர்களுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏமாற்றம் ஏற்படாத வகையில் அதை நடத்தி வைப்பதற்காக அவர்களின் யோசனைகளை நாங்கள் நன்கு கவனிப்போம். 

இந்திய சினிமா 100

டம் அசையுமா என்பதே மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சலனப்படங்கள் எனும் மவுனப்படங்களை லூமியர் சகோதரர்கள் மூலம் உலகம் கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களான  மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகைய படங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1897-ல் சென்னை விக்டோரியா டவுன்ஹாலிலில் முதன்முதலாக மவுனத் திரைப்படம் திரையிடப்பப்பட்டபோது அது மாபெரும் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை யாரும் உணரவில்லை. ஏதோ ஒன்று புதிதாக வந்திருக்கிறது என்று ஆச்சரியத்துடன் அசையும் படங்களைப் பார்த்தார்கள்.

இது ஒரு புதிய கலை என்பதைக் கண்டுணர்ந்த முதன்மையாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளியான சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் முக்கியமானவர். பிரான்ஸ் நாட்டிலிலிருந்து இந்தியாவுக்கு வந்து படம் காட்டிய டூபாண்ட் என்பவரிடமிருந்து படச் சுருள்களையும் படம் காட்டும் கருவியையும் வாங்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் அதை சென்னையில் தொடங்கி பல நகரங்களிலும் வாழ்ந்த மக்களுக்குக் காட்டினார். இதற்காக அவர் ஆங்காங்கே தற்காலிலிகக் கொட்டகைகளை அமைத்தார். அத்தகைய கொட்டகைகள் பிற்காலத்தில்  நிரந்தரமாகி, "டெண்ட் கொட்டாய்' என பேச்சுவழக்கில் அழைக்கப்பட்டன. கோவையில் சாமிக் கண்ணு வின்சென்ட் படத்தயாரிப்பாளராக மாறியதுடன், வெரைட்டி ஹால் என்ற திரையரங்கத்தையும் அமைத்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மவுனத் திரைப்படங்கள் மீதான கவனம் அதிகரித்தது. 1910-ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தாதாசாகேப் பால்கே என்பவர் மும்பையில் திரையிடப்பட்ட கண்ச்ங் ர்ச் ஈட்ழ்ண்ள்ற் (இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை) என்ற வெளிநாட்டு மவுனப்படத்தைப் பார்த்தார். வெண்திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரது மனத்திரையில் புதிய காட்சிகள் ஓடின. இயேசுவுக்குப் பதில் ராமரும் கிருஷ்ணரும் தெரிந்தனர். ஜெருசலத்திற்கும் பெத்லேஹமிற்கும் பதில் கோகுலமும் அயோத்தியும் தோன்றின. நம்மிடமும் சொல்வதற்கு நிறைய கதை இருக்கின்றனவே அவற்றை ஏன் மவுனத் திரைப்படங்களாக சொல்லக்கூடாது என   நினைத்தார் பால்கே. அதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். ஏராளமான கஷ்டங்கள், அலைச்சல்கள், கடும் உழைப்பு இவற்றின் பயனாய் 1912-ல் இந்தியாவின் முதல் திரைப்படமான "ராஜா அரிச்சந்திரா' என்ற மவுனப் படத்தைப் பால்கே திரையிட்டார். அது  மக்களைக் கவர்ந்தது. இந்தியாவில் புராணக்கதைகளுக்கா பஞ்சம்? அவையெல்லாம் மவுனப்படங்களாக வெளிவரத் தொடங்கின. திரையில் படம் ஓடும், அருகில் ஒருவர் நின்று கதையை விளக்கிக்கொண்டிருப்பார். மக்கள் ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.


தமிழகத்திலும் படம் எடுக்கும் முயற்சிகள் தொடங்கின. மோட்டார் உதிரி பாகங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரான ஆர்.நடராஜ முதலிலியார் என்பவர் 1916-ல் எடுத்து வெளியிட்ட "கீசகவதம்' என்ற திரைப் படமே தமிழின் முதல் மவுனப்படம். தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கும்கூட இதுவே முதல்படம். கேரளாவின் முதல் மவுனப்படம் 1928-ல் வெளியானது. ஜே.சி.டேனியல் என்பவர் தயாரித்த "விகதகுமாரன்' என்ற அப்படம் புராணக்கதையைப் பேசவில்லை. மலையாள சமூகத்தைப் பிரதிபலிலித்தது. அதில் உயர்குலத்துப் பெண் வேடத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்  சேர்ந்த ஒருவர் நடித்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் கேரளாவின் உயர்சாதியினர் வன்முறை செய்தனர். படம் நிறுத்தப்பட்டது. அதன்பின் "மார்த்தாண்டவர்மா' என்ற படம் 1931-ல் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது. தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட மவுனப்படங்களில் தற்போது முழுமையாக பாதுகாக்கப்பட்டிருப்பது இந்த ஒரு படம் மட்டும்தான்.

அசையும் மவுனப் படங்களையே மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், படம் பேசுவதை எப்படிப்  பார்த்திருப்பார்கள்? "கலிலி முத்திப் போயிடிச்சி. அதனால்தான் படம்கூட பேசுகிறது' என்று மிரண்டு போய் திரையரங்கத்தை விட்டு வெளியே வந்தவர்களும் உண்டு. ஆனால், பேசும் படங்கள் பெரும்பாலான மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 1931-ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமையன்று வெளியானது இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா'. அதே ஆண்டில்தான் தமிழின் முதல் பேசும்படமான "காளிதாஸ்' வெளியானது. 1931 அக்டோபர் 31 சனிக்கிழமையன்று வெளியான  இப்படம் தமிழும் தெலுங்கும் கலந்த பேசிய படம். எனவே, தெலுங்கிற்கும் இதுவே முதல் பேசும்படம்.

பெருமளவில் புராணக்கதைகளும் ஓரளவு சமூகக் கதைகளும் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் சென்று சேர்ந்தன. நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் பொம்மலாட்டங்களிலும் கதாகாலட்சேபங்களிலும் பார்த்து ரசித்த கதைகளை கருப்பு-வெள்ளையில் வெளிவந்த இப்படங்கள் காட்டியதால் மக்களுக்கு இது புதுமையான  கலைவடிவமாக இருந்தது. திரைப்படங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையோடு கலக்கத் தொடங்கின.

சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகளும் காங்கிரஸ் இயக்கமும் தீவிரமாக  முன்னெடுத்த காலம் என்பதால் திரைப்படங்களின் வாயிலாகவும் விடுதலைக் குரல்கள் ஒலிலித்தன. காளிதாஸ் படம் புராணக்கதையின் அடிப் படையில் அமைந்தது என்றாலும் அதில் காந்தியடிகளைப் புகழும் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தி, வங்காளம் உள்ளிட்ட பிறமொழிகளில் 1930-களிலும் 1940-களிலும் வெளியான படங்களில் விடுதலை உணர்வை ஊட்டக்கூடிய காட்சிகள் இடம்பெற்றன. வி.சாந்தாராம், கே.ஏ.அப்பாஸ், ராஜ்கபூர் போன்ற இயக்குநர்கள் இந்தியில் நல்ல படங்களைத் தந்தனர். தமிழில் எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கரும், கே.சுப்ரமணியம், கே.ராம்நாத் போன்ற இயக்குநர்களும் பல படங்களைத் தந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி கே.சுப்ரமணியம் இயக்கிய "தியாக பூமி' என்ற படம் விடுதலைப் போராட்டத்தைத் தூண்டுவதாகக் கூறி அப்படத்திற்கு ஆங்கில அரசாங்கம் தடை விதித்தது.

பாடலும் இசையும் இந்தியப் படங்களில் முக்கிய இடம் பிடித்தன. தமிழில் எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எல்.சுப்புலட்சுமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் போன்றவர்கள் சொந்தக்குரலிலில் பாடி நடித்தனர். அவர்களின் பாடலுக்காகவே ரசிகர்கள் பல முறை படங்களைப்  பார்த்தனர். திரைப்படங்களில் நடித்த நடிகர்-நடிகையர் நட்சத்திரங்கள் போல ரசிகர்களின் இதய வானில் மின்னினர். தியாகராஜபாகவதர் நடித்த "ஹரிதாஸ்' என்ற திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட பெரும் வெற்றிப்படமானது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு திரைப்படங்களில் ஜமீன்தார் ஆதிக்கம், உயர்சாதி ஆதிக்கம்  கொண்ட குடும்பக் கதைகளும் காதல் காட்சிகளும் அதிகரித்தன. நேரடியாகப் பாடும் நடிகர்-நடிகையரின் செல்வாக்கு குறைந்து, புதுமுகங்கள் அறிமுகமாகி வித்தியாசமான நடிப்பு, நடனம், சண்டைக்காட்சிகள் மூலம் புகழ் பெற்றனர். இந்தியில் குருதத், திலீப்குமார், நர்கீஸ், மதுபாலா, தேவ்ஆனந்த், மீனாகுமாரி, வகீதா ரகுமான் போன்றோர் புகழ்பெற்றனர். மதர் இந்தியா போன்ற இந்திப் படங்கள் சராசரி மக்களின் வாழ்க்கையைக் காட்டின. மராட்டிய மொழித் திரைப்படங்களும் வங்க மொழிப் படங்களும் சமுதாயத்தைப் பிரதிபலிலிக்கும் வகையில் அமைந்தன. புகழ்மிக்க  இயக்குநர் சத்யஜித்ரே 1955-ஆம் ஆண்டு இயக்கிய பதேர் பாஞ்சாலிலி திரைப்படம் கதையமைப்பிலும் உருவாக்கத்திலும் மாறுபட்டதாக அமைந்தது.

1950-களில்தான் மலையாளத் திரையுலகமும் தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கியது. மலையாள மொழியின் முதல் பேசும்படம் 1938-ல் எஸ்.நொட்டானி இயக்கத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரிப்பில் வெளியான "பாலன்'. மற்ற மொழிகளைவிட மலையாளம் சற்று தாமதமாகத்தான் திரைப்படத்தில் அடியெடுத்து வைத்தது என்றாலும் மவுனப் படக்காலத்திலிருந்தே அது புராண- இதிகாசங்களைவிட தன் மண்ணின் தன்மையை வெளிப்படுத்தும் கதையமைப் பிலேயே கவனம் செலுத்தியது. நிலவுடைமை, சாதி ஆதிக்கம் இவற்றின் பிடியில் உள்ள சமுதாயத்தை அது தன் படங்களில் காட்டியது. 1954-ல் வெளியான நீலக்குயில் அத்தகைய படங்களில் ஒன்று. மலையாள எழுத்தாளர்களின் பங்களிப்புடன் அம்மொழித் திரைப்படங்கள் வெளியாயின.

தமிழ்த் திரையுலகம், இந்திய விடுதலைக்குப்பிறகு பல மாற்றங்களைக் கண்டது. திராவிடர்  இயக்கத்தின் வளர்ச்சியும் தாய்மொழியுணர்வும் பகுத்தறிவு கருத்துகளும் தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றின. அறிஞர்  அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு, கலைஞர் மு.கருணாநிதியின் மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் கதையமைப்பிலும் வசனத்திலும் புதுமையையும்  புரட்சியையும் ஏற்படுத்தின. சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பழக்கவழக்கங் களை சுட்டெரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் அமைந்தன. எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற திராவிட இயக்கத்திலிலிருந்து  வந்த நடிகர்கள் தங்கள் இயக்கக் கொள்கைகளைத் திரைப்படங்கள் மூலம் பரப்பினர். சிவாஜி கணேசனின் அபார நடிப்பாற்றல் திரையுலகில் ஒரு  திருப்புமுனையாக  அமைந்தது.

கதாநாயகர்களின் காலமாகவும் காதல் காவியங்களின் யுகமாகவும் 1960 மாறியது. இந்தியில் வெளியான மொகலே ஆஜம் என்ற பிரம்மாண்ட திரைப்படம் சலீம்- அனார்கலிலி காதல் கதையை புதிய கோணத்தில் சொன்னது. தமிழில் மக்கள்திலகமாக எம்.ஜி.ஆரும், நடிகர் திலகமாக சிவாஜிகணேசனும் ரசிகர்கள் மனதில் உயர்ந்து நின்றனர். அவர்களுக்கென ரசிகர் மன்றங்கள் உருவாகி பலமிக்க அமைப்புகளாக மாறின. அரசியல் தொடர்புகள் கொண்டவர்களாக இருபெரும் நட்சத்திரங் களும் இருந்ததால் அவை அவர்களின் படங்களிலும் வெளிப்பட்டன. ஏழைகளுக்கு உதவும் நாயகனாக எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தார். குடும்பப்பொறுப்புள்ள பாத்திரங்களிலும் வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வரலாற்று நாயகர்களாகவும் சிவாஜி நடித்தார். தெலுங்குத் திரையுலகிலும் இதே கால கட்டத்தில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோர் ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்களாயினர். ராமர், கிருஷ்ணர் போன்ற புராணக் கடவுள் வேடங்களில் ராமராவ் தொடர்ந்து நடித்து, மக்கள் மனதில் நிலை பெற்றார். தேவதாஸ் போன்ற காதல் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார் நாகேஸ்வரராவ். கன்னட பட உலகில் ராஜ்குமார், அம்மாநில மக்களின் அபிமானம் பெற்ற நடிகரானார்.

மலையாளத் திரைப்பட உலகம் வழக்கம்போல தனது மண்ணையும் அதனையொட்டிய வாழ்வையும் பதிவு செய்துவந்தது. ராமுகாரியத் இயக்கத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் நாவல் அதே பெயரில் 1965-ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்றது. மலையாளத்தின் பக்கம் இந்தியத் திரையுலகின் பார்வை திரும்பிய அவ்வேளையில் மராட்டியம், அசாம், வங்கமொழிப் படங்களும் மண் மணக்கும் படங்களாக வெளிவரத் தொடங்கின. எனினும், வடமாநிலங்களில் இந்தி மொழிப் படங்களே ஆதிக்கம் செலுத்தின.

சினிமாவின் தாக்கம் அரசியலிலிலும் எதிரொலிலிக்கத் தொடங்கியது. தமிழ்த் திரையுலகில் இலட்சிய நடிகர்  எனப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அவர் சார்ந்திருந்த தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 1971-ஆம் ஆண்டு தேர்தலிலில் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்திற்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1972-ல் தி.மு.கவிலிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கினார். அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1977-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 1987வரை முதல்வராக இருந்து காலமானார் எம்.ஜி.ஆர். அதுபோல தெலுங்கு பட நாயகரான என்.டி.ராமராவ் ஆந்திராவில் தெலுங்குதேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி 1981-ல் அம் மாநிலத்தின் முதல்வரானார்.

தனிப்பட்ட செல்வாக்கை அரசியல்மயமாக்கிக் கொண்ட நடிகர்கள்  தென்மாநிலங்களில் வலுப்பெற்றிருந்த நிலையில் இந்திப் படங்களில் ராஜேஷ்கண்ணா, தர்மேந்திரா, ரிஷிகபூர் போன்ற நடிகர்கள் காதல் படங்களிலும் சண்டைப்படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வந்தனர். 1970-களின் பிற்பகுதியில் இந்த நிலை மெல்ல மெல்ல மாறியது. இந்தியாவில் மாறிவந்த அரசியல் சூழ்நிலை, வேலைவாய்ப்பின்மை, நக்சலைட்டுகள் எழுச்சி இவற்றின் காரணமாக கோபக்கார இளைஞர் களாக நாயகர்கள் உருவாகினர். இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் அமிதாப்பச்சன் அத்தகைய கதாபாத்திரம் கொண்ட பல படங்களில் நடித்தார். 1980-களின் இறுதி வரையில் அத்தகைய படங்கள் வெளிவந்தன. தமிழில் கமலஹாசன், ரஜினிகாந்த் என இருபெரும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறி, வெற்றிகரமான பல படங்களை அளித்தனர்.

தமிழ்த்திரையுலகில் 1960-களில் முக்கோணக் காதல் கதைகளைச் சொன்ன இயக்குநர் ஸ்ரீதர், 1970-களில் ஆண்-பெண் மன உணர்வுகளை குடும்பச் சிக்கல்களுடன் இணைத்துச்சொன்ன இயக்குநர் கே.பாலசந்தர் இவர்களைத் தொடர்ந்து  தமிழ்த்திரையுலகின் போக்கை மாற்றும் வகையில் இயக்குநர்கள் மகேந்திரன், பாரதி ராஜா ஆகியோர் தங்கள் படங்களைத் தந்தனர். ஸ்டுடியோவுக்குள் இருந்த திரைப்படங்களை கிராமங்களை நோக்கித் திருப்பியவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே, மண்வாசனை, முதல்மரியாதை உள்ளிட்ட படங்களில் தென்மாவட்டத் தமிழர்களின் வாழ்க்கை முறையைத் தன் படங்களில் உயிரோட்டமாக அவர் பதிவு செய்தார். திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதையும் பேச்சை விட அழுத்தமான காட்சிகளே முக்கியம் என்பதை இயக்குநர் மகேந்திரன் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் உள்ளிட்ட தனது படங்களில் காட்டினார். அசோக்குமார், பாலுமகேந்திரா போன்ற ஒளிப்பதிவாளர்கள் வசனங் களற்ற திரைமொழியை உருவாக்கினர். தமிழ்ப்படத்தின் தரத்தை மேம்படுத்தியவர்களில் மணிரத்னம் குறிப்பிடத்தக்கவர். 

பேசும்படம் உருவான காலத்திலிலிருந்தே இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இசையும் பாடலும்  முக்கியத்துவம் பெற்றன. இந்தியில் சங்கர்-ஜெய்கிஷனில் தொடங்கி நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரேலால், ஆர்.டி.பர்மன் எனப் பல இசையமைப்பாளர்கள் இந்தியத்தன்மையுடன் கூடிய இசையைக் கொடுக்க குல்சார், ஜாவேத் அக்தர் போன்றவர்கள் செழுமைமிக்க உருதும் இந்தியும் கலந்த பாடல்களைத் தந்தனர். முகமது ரஃபி, கிஷோர்குமார், லதாமங்கேஷ்கர், ஆஷாபோன்ஸ்லே போன்ற பாடகர்கள் அவற்றிற்கு தங்கள் குரலால் உயிரூட்டினர். வங்கம், மராட்டியம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாடலும் இசையும் அந்தந்த மண்ணின் மகத்துவத்தை  எடுத்துச்சொல்லிலின.

தமிழில் ஜி.ராமநாதனில் தொடங்கி விஸ்வநாதன்- ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என வளர்ந்த திரையிசை இளையராஜா என்ற இசைக்கலைஞர் மூலம் தனித்துவம் பெற்றது. தமிழ் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புற இசையைத் திரைக்கேற்ற வகையில் மிகச்சிறப்பாகக் கொடுத்தவர் இளையராஜா. அவரைத் தொடர்ந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைக்குத் தேவையான மேற்கத்திய இசையை மற்ற இந்திய இசை வகைகளுடன் கலந்து தந்து, உலக அளவில் புகழ்பெற்று ஆஸ்கர் விருது வென்றார். பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம், கண்ண தாசன், வைரமுத்து எனத் தமிழில் காலந்தோறும் இலக்கியத்தை திரை மூலம் வடிக்கும் கவிஞர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன், வாணிஜெயராம், யேசுதாஸ், சித்ரா எனப் பாடகர்கள் தமிழ்த்  திரை யிசைக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்குப் பொழுதுபோக்காகவும், திரைத் துறையினருக்குத் தொழிலாகவும் அமைந்துள்ள சினிமா  என்பது விஞ்ஞானம் தந்த அற்புதமான கலை வடிவம். பலரும் இதை வியாபாரமாகக் கையாண்டாலும், இந்தக் கலையின் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாழ்க்கையின் பன்முகத்தன்மையை எடுத்துச் சொல்லவும் முடியும். அத்தகையப் பணியை மேற்கொள்ளும் படைப்பாளிகளும் நடிகர்களும் எல்லாக் காலத்திலும் குறைவான அளவிலேயே  இருந்தாலும்  அவர்கள் தங்கள் பணிகளைத் திறம்படவே  செய்திருக் கிறார்கள். பெண்கள் இத்துறையில் நீண்டகாலம் கவர்ச்சிப் பதுமைகளாகவே பயன்படுத்துப்பட்டு வந்தனர். நர்கீஸ், ஸ்மிதாபாட்டீல், ஷபனா ஆஸ்மி, பானுமதி, மீராநாயர் உள்ளிட்டவர்கள் திரைத்துறையில் பெண்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தனர். எனினும், இத்துறையில் பெண்கள் இன்றளவும் போராட வேண்டியிருக்கிறது.

உலகமயமும் புதிய பொருளாதாரக் கொள்கையும் தன் கால்களை அழுந்தப் பதித்த 1990-களிலிலிருந்து இந்த 2013-வரை இந்தியத் திரையுலகின் போக்கு பரந்து பட்ட வியாபாரத்தன்மை கொண்டதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாகவும் மாறியுள்ளது. வழக்கமான காதல், நகைச்சுவைக் கதைகளிலிலிருந்து தீவிரவாதிகள், மதவெறியர்கள், நிழலுலக தாதாக்கள், அரசியல் கொள்ளையர்கள், சமூக ஒழுங்கீனங்கள் வரை பலவற்றையும் படமாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்றைய கல்விமுறையை கேள்விக்குட்படுத்தி புதியமுறையை உணர்த்திய அமீர்கானின் "தாரே ஜமீன் பர்', மொபைல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இளைஞர்களைத் திசை திருப்புவதைக் காட்டும் பாலாஜி சக்திவேலிலின் "வழக்கு எண் 18/9' போன்ற படங்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாளமாக விளங்கு கின்றன. மலையாளத்தில் வெளியான "செல்லுலாய்டு', தமிழில் வந்த  "பரதேசி' போன்ற படங்களின் மூலம் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளும் தொடர்கின்றன.

புதிய புதிய தொழில்நுட்பங்களால் திரைப்படம் என்பது பல கட்டங்களை எட்டியுள்ளது. விளம்பரப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் என கலையார்வத்துடன் இத்துறையில் கால்பதிப்பதற்கேற்ற வகையில் அகலமான வாசல் திறக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் காலமாகத் திரையுலகம் மாறியுள்ளது. இந்த  மாற்றத்தை நூற்றாண்டு காணும் இந்திய சினிமா சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். 

Source:நக்கீரன்

Sunday, April 14, 2013

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள்

விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத் தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள் இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் சம்பந்தப்பட்டவை. அவை குறிப்பிடும் பல செய்திகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியலி லும் அமெரிக்கா மிகத் தீவிரமான தொடர்பு வைத்திருந் தது அம்பலமாகிறது. உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள் உண்மையில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகளைப் பற்றி மிகச் சிறிய தகவல்களைக்கூட தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு அரசாங்கத்திற்கு அனுப்பி வந்திருக் கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டையும் பற்றி லட்சக்கணக்கான பக்கங்களிலான ஆவணங்கள் அமெரிக்கா வசம் உள்ளன. அந்த ஆவணங்களைத் தான் விக்கிலீக்ஸ் கைப்பற்றி இப்போது வெளியிட்டு வருகிறது.


ஈழப் பிரச்சினையில் பலருடைய நிலைப்பாடுகள் கடந்த காலத்தில் எப்படி இருந்தன என்பதற்கு விக்கி லீக்ஸ் பல சுவாரசியமான உண்மைகளை வெளிப் படுத்துகிறது. இப்போது ஈழத்தை மலரச் செய்யப் போகிறவராகவும் ஈழத் தாயாகவும் வர்ணிக்கப் படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991இல் ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு புலிகளை தமிழகத்திலிருந்து எந்த அளவிற்கு துடைத் தெறிய வேண்டும் என்பதில் ஆவேசம் காட்டி னார் என்பதை அது வெளிப்படுத்துகிறது. அப் போது சென்னையிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரு டி சின்கின் அமெரிக்காவுக்கு அனுப்பிய செய்தியில், ஜெயலலிதா புலிகளைத் தமிழகத்திலிருந்து வேரறுப்பதில் ஒரு இரும்புப் பெண்மணியாகச் செயல்பட்டு வருகிறார் என்றும், தமிழகத்தின் முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரி ஒருவரிடம் புலிகளை அழிக்க எந்த நடவடிக் கைக்கும் தயங்க வேண்டாம். தேவைப்பட்டால் புலிகளோடு தொடர்புடையவர்களை போலி என்கவுன்டரில் கொல்லவும் செய்யலாம் என்றும் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் தூதரும் ராஜீவ் காந்தியின் ஆலோசகருமான ஜி.பார்த்தசாரதி சொன்ன ஒரு கருத்தையும் விக்கிலீக்ஸ் சுட்டிக் காட்டுகிறது. கருணாநிதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோதும் 1989இல் ஆட்சிக்கு வந்ததும் புலிகளின் ஆதரவாளராக மாறினார் என்றும், தமிழகத்தில் புலிகளை வளரவிட்டதே அவர் செய்த தவறு என்றும், ஆனால் ஜெயலலிதா புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதன் மூலம் தனது சட்டபூர்வ கடமையை சிறப்பாக நிறைவேற்றி வருவதாக பார்த்தசாரதி கூறியதை விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது.


ஆனால் விக்கிலீக்ஸ், 2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தமிழக மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் விடுதலைப் புலிகள்தான் என அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்ததை இங்குள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து வாஷிங்டனுக்கு செய்தி அனுப்பியதையும் அது சுட்டிக்காட்டுகிறது. அதோடு அந்த ஆவணம் நிற்கவில்லை. கருணாநிதி, இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி அளிப்பதை ஒரு போதும் தி.மு.க. ஆதரிக்காது என அப்போதே எச்சரித்ததையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தகவல் அனுப்பப்பட்ட காலத்தில்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்களை இலங்கை ராணுவம் நடுக்கடலில் வைத்து அழிப்பதற்கு இலங்கை ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்ததை நாம் நினைவுபடுத்திக் கொள் வது நல்லது.

மேலும் விக்கிலீக்ஸ் 2011இல் வெளியிட்ட சில ஆவணங்களில் 2007 போரில் இலங்கை அரசாங்கம் இந்தியா தனக்குக் கொடுத்த ரேடார்கள் தனக்குப் போதவில்லையென்று அமெரிக்காவிடம் ரேடார்களை அளித்து உதவு மாறு கேட்டதையும் வெளிப்படுத்துகிறது. 2007, மார்ச் மாதத்தில் கட்டுநாயக்கா விமான நிலை யத்தின்மீது புலிகளால் நடத்தப்பட்ட வான்வெளி விமானத் தாக்குதல்களால் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட எம்.ஐ. ரக ஹெலிகாப்டர் களும் சேதமடைந்தன. இந்தியா அளித்திருந்த இரு பரிமாண ரேடார்களால் புலிகள் வந்ததை கண்டறிய முடியவில்லை. எனவே சீனாவிட மிருந்து முப்பரிமாண ரேடார்கள் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்சே அமெரிக்க தூதரகத்திடம் தெரிவித்ததையும் அதே சமயம், இந்தியாவிற்குத் தெரியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என கோத்தபாய ஒப்புக்கொண்டதையும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

மேலும் இலங்கையின் கடற்பரப்பைக் கண்காணிப்பதற்காக அமெரிக்கா கொடுத்த ரேடார்களை வட பகுதியில் நிறுவக்கூடாது என்று இலங்கை அரசாங்கத் திற்கு ஒரு முறை இந்தியா ஆட்சேபம் தெரிவித்ததையும், இலங்கை அதற்கு உடன்படாததால் இந்தியா தனது எதிர்ப்பைக் கைவிட்டு விட்டதையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக 2008இல் விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிப் போர் நின்றுவிடாத வகையில் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம்தான் காப்பாற்றியது என்பதற்கான ஆதாரங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009இல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அப்போதைய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்பட்சத்தில் போரைத் தொடரலாம் எனக் கூறியதாக அமெரிக்க தூதரிடம் இந்திய துணை தூதர் சொன்னதையும் விக்கிலீக்ஸ் அப்போதே வெளியிட்டது.

இதன்மூலமாக புலிகளை ஒடுக்குவதில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுமே எவ்வாறு கூட்டாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதை நாம் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய தேசிய அரசியலிலும் விக்கிலீக்ஸ் தொடர்ந்து புயலைக் கிளப்பி வருகிறது. ஏற்கனவே 2011இல் அது வெளியிட்ட ஒரு ஆவணத்தில்   பா.ஜ.க. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் எப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் வேஷம் போடுகிறது என்பதை வெளிப்படுத்தியது. 2009ஆம்     ஆண்டு மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவு கள் வருவதற்கு முந்தைய தினத்தில் அமெரிக்க தூதரக உயர் பொறுப் பிலிருந்த பீட்டர் பாலிக் அத்வானியை சந்தித்தார். அவரிடம் அத்வானி, ‘பா.ஜ.க. ஆட்சி அமைத் தால், அமெரிக்கா-இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையி லான எந்தவித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படாது‘ எனக் கூறினாராம். 2009-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறை வழங்கப்பட்டதை கேள்விப்பட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சிக்கு ஆளானாராம். மோன் டெக் சிங் அலுவாலியா அல்லது ப.சிதம்பரத்திற் குத்தான் நிதித்துறை அளிக்கப்பட வேண்டு மென்று அமெரிக்க அரசாங்கம் விரும்பியது. இந்த முடிவு குறித்து தனது தூதரகத்திற்கு ஹிலாரி கிளின்டன் அனுப்பிய கேள்விகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இந்திய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் தனக்குச் சாதகமாக யார் இருக்க வேண்டு மென்பது வரை அமெரிக்கா தீர்மானமான தலையீடுகளைச் செய்து வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

கடந்த வாரம் வெளிவந்த பல விக்கிலீக்ஸ் தகவல்கள் பலருக்கும் பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 1970களில் ராஜீவ் காந்தி ஸ்வீடன் நாட்டு கம்பெனியிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு ஜெட் விமானங்கள் வாங்க நடந்த பேரத்தில் இடைத் தரகராகச் செயல்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பி வருகிறது. அதே போல இந்திரா காந்தியின் இன்னொரு மகனான சஞ்சய் காந்தி, அவர் பெரும்பான்மை பங்குகளை வைத்தி ருக்கும் மாருதி நிறுவனத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏர் கார்ப்பரேஷனுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஏஜென் டாக செயல் பட்டதை வெளிப் படுத்தியிருக்கிறது. நெருக்கடி நிலை காலத்தின்போது இந்திராகாந்தி யின் வீட்டிலேயே ஒரு அமெரிக்க உளவாளியை 1975-1977 வரை அமெரிக்கா வைத்திருந்த அதிர்ச்சித் தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் அப்போது நெருக்கடி நிலையை செயல்படுத்துவதில் யாரெல்லாம் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பதையும் ஏ.கே. ஆன்டனி போன்றவர்கள் சஞ்சய் காந்தியை எதிர்த்ததையும் அமெரிக்கா தன் உளவாளிகள் மூலம் தெரிந்து வைத்திருந்தது. நெருக்கடி நிலையின்போது இந்தியாவில் அமெரிக்காவின் செயல்பாடுகள் காங்கிரஸோடு நிற்கவில்லை. அப்போது முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், அமெரிக்க எதிர்ப்பாளரும், சோஷலிஸக் கொள்கைகளைப் பேசுபவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மத்திய அரசுக்கெதிராக சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட சி.ஐ.ஏ.யிடம் நிதி உதவி கோரினாராம்.

அதேபோல நெருக்கடி நிலையை அப்போதைய தி.மு.க. அரசு எதிர்த்த போது மத்திய அரசிற்கும் அதற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அந்த சமயம் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்ச ராக இருந்த கே.ராஜாராம் அமெரிக்க தூதரிடம், தமிழகம் இந்தியாவிலிருந்து தனியாக பிரிந்துபோக விரும்பினால் அதற்கு அமெரிக்கா உதவுமா என்று கேட்டதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. இந்திரா காந்தியை சோவியத் ரஷ்யா ஆதரிப்பதால் அதற்கெதிராக ராஜாராம் இந்த உதவியைக் கேட்டாராம்.

என்ன தலை சுற்றுகிறதா? இந்திய அரசியலைப் பற்றி, தமிழக அரசியலைப் பற்றி நம்மைவிட அமெரிக்காவுக்குத்தான் நன்கு தெரியும் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டு வரும் தகவல்கள் எல்லாம் பொய் என்று காங்கிரஸ் புலம்ப ஆரம்பித்திருக்கிறது. விக்கிலீக்ஸை அது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவைச் சித்தரிப்பது போல சித்தரித்து வருகிறது. லண்டனிலுள்ள ஈகோடார் தூதரகத்தில் சரணடைந்து வாழும் விக்கிலீக்ஸின் தலைவர் ஜூலியன் அஸாங்கே காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து ராகுல் காந்திக்கு எதிராக அடுத்த தேர்தலில் நிற்கவா போகிறார்?
source: Nakkheeran